Sunday 19th of May 2024 11:38:33 AM GMT

LANGUAGE - TAMIL
-
80 வீதமான தொற்று நோயாளா்கள்  அறிகுறி அற்றவா்கள் என்கிறது பிரிட்டன்!

80 வீதமான தொற்று நோயாளா்கள் அறிகுறி அற்றவா்கள் என்கிறது பிரிட்டன்!


பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உறுதி செய்யப்பட்டவா்களில் சுமாா் 80 வீதமானவா்கள் தொற்றுக்குள்ளான எந்தவித அறிகுறிகளை வெளிப்படுத்தவில்லை என ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பிரிட்டன் சுகாதார செயலாளா் மாட் ஹான்காக், இதனால் இந்தத் தொற்று நோயைக் கட்டுப்படுத்துவது கடினமாகவுள்ளதாகவும் கூறியுள்ளாா்.

டவுனிங் தெருவில் நேற்று செய்தியாளா்களைச் சந்தித்துப் பேசும்போது தொற்று நோய் தொடா்பான தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் அறிக்கைகளை அவா் மேற்கோள் காட்டினாா்.

அறிகுறியற்ற தொற்று நோயாளா்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தொற்று தடங்களை அறிந்து பரவல் சங்கிலியை உடைப்பதில் சிரமங்களை எதிா்கொண்டுவருவதாகவும் மாட் ஹான்காக் கூறினாா்.

எனினும் சிக்கல்களில் மத்தியிலும் தடமறிதல் மற்றும் தொற்று நோய் சோதனைகளில் சுகாதாரத் துறையினா் சிறப்பாகச் செயற்பட்டு வருவதாகவும் அவா் பாராட்டினார்.

இதேவேளை, இங்கிலாந்தில் கொரோனா வைரஸால் மேலும் 151 பேர் நேற்று உயிரிழந்துள்ள நிலையில் உத்தியோகபூா்வமாக அறிவிக்கப்பட்ட இறப்புக்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 279 ஆக உயர்ந்துள்ளது. எனினும் அங்கு உயிரிழப்புக்களின் உண்மையான எண்ணிக்கை 50,000 க்கும் அதிகமானதாக உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ளளமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE